File:K.V.Nannan.jpg
Original file (1,131 × 1,706 pixels, file size: 97 KB, MIME type: image/jpeg)
Captions
Summary edit
DescriptionK.V.Nannan.jpg |
தமிழ்: கொட்டகுளம் வீமன் நன்னன், (ஆங்கிலம்:K.V.Nannan)(பிறப்பு செப்டம்பர் 16, 1934) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர தொண்டரும், செங்கம் சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினருமாவார். மே 22, 1996ம் ஆண்டு செங்கம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்றார். கொ.வீ.நன்னன், தமிழ் நாடகம், கதை, கவிதை பணிகளில் ஈடுபாடு கொண்டவர். இவரது கவிதைகளில் தெரிக்கும் புரட்சிகரமான சமூக சீர்த்திருத்த கருத்துகளை கண்டு வியந்த திருவண்ணாமலையை சேர்ந்த டாக்டர்.துரைராஜ், 1983ம் ஆண்டில் நன்னனுக்கு புரட்சிப்பாவலர் என்று பட்டம் கொடுத்து பெருமைப்பட்டு கொண்டார். இன்றும் அனைவராலும் பாவலர் என்று அன்பொழுக அழைக்கப்படுகின்றார். இன்றும் இலக்கியப்பணியில் தீராத ஆர்வத்துடன் பல புதிய நூல்களை இயற்றிவருகிறார்.
1. இளமைப்பருவம் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், கொட்டகுளம் கிராமத்தில் 1934 நவம்பர் 16ம் தேதி வீமன் மற்றும் முத்தாலம்மாள் தம்பதிக்கு முதலாவது மகனாக பிறந்தார். பள்ளிக்காலத்தில் தமிழ் மீது அதீத காதல் கொண்டு, இவரது தாத்தா முத்து அவர்களின் ஊக்கத்தின் விளைவாக ராமாயணம், மகாபாராதம் போன்ற இந்திய புராணங்களை இளம் வயதிலேயே படித்தறிந்தவர். இவரது தாத்தா முத்துவின் ஊக்கத்தின் காரணமாக தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் செலுத்த தொடங்கினார். இளம்வயது முதல் கவிதைப்புனைவதில் திறன் கொண்டவராக திகழ்ந்தார். கொட்டகுளம் அரசு ஆரம்பப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். வறுமையின் காரணமாக மேலே படிக்க முடியாத சூழ்நிலையில் பள்ளிப்படிப்பை நிறுத்தி கொள்ள நேர்ந்துள்ளது. 2.அரசியல் சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை போக்குவதற்காக சமூக சீர்த்திருத்தங்களில் ஈடுபாடு கொண்டு செயல்பட தொடங்கினார். ஆரம்பக்காலத்தில் தந்தை பெரியாரின் செறிவார்ந்த பேச்சால் ஈர்க்கப்பட்டு, திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். பெரியாரின் கொள்கைகள், தத்துவங்கள், சமூகசீர்த்திருத்த சிந்தனைகளை பரப்புவதற்காக நாடகம், பாடல்கள், கவிதைகள் இயற்றி கிராமம்கிராமமாக சென்று பிரசாரம் செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமல்லாது, வேலூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து திராவிடர் இயக்கக்கொள்கைகளை பரப்பிவந்தார். பின்னர், அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திராவிடர் முன்னேற்றக்கழகத்தின் தன்னை இணைத்து கொண்டு சமூகப்பணிகளுடன் அரசியல் பணிகளிலும் ஈடுபட தொடங்கினார். செங்கம் பகுதியில் திராவிட முன்னேற்றக்கழகம் வளர்ச்சி பெறுவதற்கு அளப்பரிய பங்களிப்பை நல்கியுள்ளார். 1970களில் அழகிரி கலைக்குழுவை அமைத்துக்கொண்டு அன்பானந்தம், கோபால் ஆகியோருடன் இணைந்து ஊர் ஊராக சென்று திராவிட இயக்க கொள்கைகளை பாடல்கள், நாடகம், கவிதைகள் மூலம் பிரசாரம் செய்துவந்தார். இதனால், 1983ல் செங்கம் நகர பொருளாளராக நியமிக்கப்பட்டார். 1982ல் செங்கம் வருகைதந்த கலைஞர் மு.கருணாநிதியின் பொதுக்கூட்டத்தில் இயக்கப்பாடல்களை பாடி கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். செங்கம் ஒன்றியத்தில் நடைபெறும் திராவிடமுன்னேற்றக்கழக கூட்டங்களில் இயக்கப்பாடல்களை பாடி தொண்டர்களை தன்பால் ஈர்த்துவந்தார். 1983, 1989 சட்டப்பேரவை தேர்தல்களில் திராவிடமுன்னேற்றக்கழகத்தின் செங்கம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் கூட்டணி கட்சிகளான ஜனதாகட்சி, ஜனதாதள கட்சி ஆகியவற்றுக்கு தொகுதியை விட்டுக்கொடுக்க கட்சித்தலைமை கேட்டுக்கொண்டப்போது அதை தட்டாமல் செய்து முடித்தார். 1983, 1989 தேர்தல்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அல்லும்பகலும் உழைத்து வெற்றிபெற செய்தார். 1989ம் ஆண்டில் ஜனதாதள வேட்பாளர் சேட்டுவின் வெற்றிக்கு அரும்பாடுபட்டமைக்காக அக்கட்சியின் தேசியத்தலைவர் வி.பி.சிங்கின் பாராட்டை பெற்றார். 1991ல் நடந்த தேர்தலில் கட்சித்தலைமையின் உத்தரவுக்கேற்ப நன்னன் போட்டியிடவில்லை. கட்சியின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடை தவறாமல் பின்பற்றியதற்காக 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் திராவிடமுன்னேற்றக்கழக வேட்பாளராக போட்டியிட தலைமை மீண்டும் வாய்ப்பளித்தது. 1971ம் ஆண்டுக்கு பிறகு செங்கம் தொகுதியில் போட்டியிட்ட நன்னன், 26 ஆயிரம் வாக்குவித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் செ.கு.தமிழரசனை தோற்கடித்தார். 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டுவரை ஐந்து ஆண்டுகாலம் சட்டப்பேரவையில் சிறப்பான பணிகளை ஆற்றினார். தனது கவிதை, பாடல்களால் அனைத்துக்கட்சி தலைவர்களின் நல்லன்பை, பாராட்டை பெற்றார். சட்டப்பேரவையில் பாடல்கள் பாடி பத்திரிகைகளின் கவனத்தையும் ஈர்த்தார். எளிமை, நேர்மை, கடமையுணர்வு ஆகியவற்றால் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த நன்னன், கட்சியின் மாவட்ட துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். கட்சி அறிவித்த எல்லா போராட்டங்களில் பங்கேற்று மக்கள் பிரச்னைக்கு தீர்வுகாண அயராது உழைத்துள்ளார். 3. குடும்பம் கொட்டகுளம் கிராமத்தை சேர்ந்த வெள்ளையம்மாளை 1971ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முத்துமணி என்ற மகன் உள்ளார். 1974ம் ஆண்டு இவரது மனைவி வெள்ளையம்மாள் நோய்வாய்ப்பட்டு இறந்தார். தன் மகன் முத்துமணியை வளர்ப்பதற்காக வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. இவரது தாத்தா முத்து, இலக்கியப்பணிகளில் ஆர்வம் காட்ட ஊக்கமாக இருந்துள்ளார். இவரது தந்தை வீமன், ராணுவவீரர். 107 வயது வரை வாழ்ந்து மறைந்தவர். தாய் முத்தாலம்மாள், சிறந்த குழந்தையாக நன்னனை வளர்த்துள்ளார். 1919ம் ஆண்டு பிறந்த முத்தாலம்மாள், 2010 டிச.23ம் தேதி காலமானார். 4. புத்தகங்கள் திராவிடமுன்னேற்றக்கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியை பாராட்டி 'அருள்மழையாய்' என்ற நூலை 2010ம் ஆண்டில் இயற்றியுள்ளார். இதை தொடர்ந்து சமூகத்தில் ஜாதியால் ஏற்படும் தீமைகளை விளக்கும் 'சிவப்புக்குயில்' மற்றும் 'வெள்ளிக்குடம்' ஆகிய குறுங்காவிய நூல்களை 2012ம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். 2012 ஏப்.15ம் தேதி செங்கத்தில் நடந்தவிழாவில் இந்நூல்களை இலக்கியச்செல்வர் சிலம்பொலி செல்லப்பன் வெளியிட்டார். இந்நூலுக்கு பேராசிரியர் கு.வணங்காமுடி, ஆசிரியர் செங்கண்மா முருகு ஆகியோர் வழங்கியுள்ளனர். மூன்று நூல்களையும் பெங்களூரை சேர்ந்த முத்துமணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. |
Date | |
Source | Own work |
Author | Sammuthu2006 |
Licensing edit
- You are free:
- to share – to copy, distribute and transmit the work
- to remix – to adapt the work
- Under the following conditions:
- attribution – You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use.
- share alike – If you remix, transform, or build upon the material, you must distribute your contributions under the same or compatible license as the original.
File history
Click on a date/time to view the file as it appeared at that time.
Date/Time | Thumbnail | Dimensions | User | Comment | |
---|---|---|---|---|---|
current | 08:15, 15 July 2012 | 1,131 × 1,706 (97 KB) | Sammuthu2006 (talk | contribs) |
You cannot overwrite this file.
File usage on Commons
There are no pages that use this file.
Metadata
This file contains additional information such as Exif metadata which may have been added by the digital camera, scanner, or software program used to create or digitize it. If the file has been modified from its original state, some details such as the timestamp may not fully reflect those of the original file. The timestamp is only as accurate as the clock in the camera, and it may be completely wrong.
Orientation | Normal |
---|---|
Horizontal resolution | 300 dpi |
Vertical resolution | 300 dpi |
Software used | Adobe Photoshop CS2 Windows |
File change date and time | 16:52, 6 October 2008 |
Color space | sRGB |
Image width | 1,131 px |
Image height | 1,706 px |
Date and time of digitizing | 22:21, 6 October 2008 |
Date metadata was last modified | 22:22, 6 October 2008 |